பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் உள் ளது ஞானவாபி மசூதி. இத னருகில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலை 17-ஆம் நூற்றாண்டில் முக லாய மன்னரான ஔரங்கசீப் ஆக்கிர மித்து ஞானவாபி மசூதியை எழுப்பிய தாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை பிரிவான விஎச்பி குற்றம்சாட்டி வரு கிறது.
இதுதொடர்பான வழக்கு வார ணாசி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் ஞானவாபி மசூதியில் நடைபெற்ற தொல்லியல் துறை ஆய்வு அறிக்கை 3 நாட்களுக்கு முன் வெளியானது. இந்திய தொல்லியல் துறை தனது அறிக்கையில்,”இந்து கோவிலை ஆக்கி ரமித்து ஞானவாபி மசூதி கட்டப்பட்டி ருப்பதாகவும், மசூதிக்குள் இந்து வழி பாட்டின் அடையாளங்கள் இருந்தது” என வும் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையை தொடர்ந்து விஎச்பி, “இஸ்லாமிய சமூகத்தினர் உட னடியாக ஞானவாபி கட்டுமானத்தை இந்து சமூகத்தினரிடம் ஒப்படையுங்கள். தங்கள் மசூதியை வேறு இடத்தில் அமைத்துக்கொள்ளுங்கள்” என மிரட்டல் விடும் நோக்கத்தில் கூறியுள்ளது. “இந்திய தொல்லியல் துறையின் அறிக்கை என்பது இறுதியான தீர்ப்பு அல்ல” என விஎச்பியின் மிரட்டல் உத்தர வுக்கு இஸ்லாமிய தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதனால் ஞானவாபி மசூதி பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.